

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வரும் 27ம் தேதி முதல் 4 நாட்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. புரட்டாசி பவுர்ணமி தினத்தையொட்டி பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், கனமழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

