குருவித்துறை குருபகவான் கோவிலில் தரிசனத்திற்கு வருபவர் களிடம் பாகுபாடு காட்டுவதாக அர்ச்சகர்கள் மீது பக்தர்கள் குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இக்கோவிலில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் குறிப்பாக குரு பெயர்ச்சி அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு குரு பகவானை தரிசித்து செல்வர் மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டு செல்வதால்கோவிலுக்கு வரும் முக்கிய விஐபிகள் இடம் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் அதிக அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களை காக்க வைப்பதும் விஐபிகளை கவனித்துக் கொண்டு பொது தரிசனத்திற்கு வரும் பொது மக்களை உதாசீனப்படுத்துவதுமாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக கோவிலுக்கு வரும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சென்ற வியாழக்கிழமை கோவிலுக்கு சென்று வந்த பொதுமக்கள் கூறும் போது ஏற்கனவே கோவிலில் நடை திறக்கும் நேரம் மிகவும் குறைவாக உள்ளது அதாவது சாதாரண நாட்களில் மாலை ஐந்து முப்பது மணிக்கும் வியாழக்கிழமை அன்று மாலை ஆறு முப்பது மணி வரையும் கோவிலில் நடை திறந்திருக்கும் என்று நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதியத்திற்கு மேல் வரும் சாதாரண பொது மக்களிடம் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் விஐபிகளை கவனிப்பது உள்ளிட்ட வேலைகளில் இருந்து கொண்டு சாதாரண பொது மக்களிடம் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர் குறிப்பாக குருபகவான் வீற்றிருக்கும் சன்னதியில் உள்ள அர்ச்சகர்கள் பொதுமக்களை அரை மணி நேரத்திற்கு மேலாக காக்க வைத்து அனுப்புவதாகவும் விபதியை நீங்களே எடுத்துச் செல்லுங்கள் என்று உதாசினப்படுத்தி பேசுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இது சம்பந்தமாக அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய விசாரணை செய்து பொதுமக்களுக்கு ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அர்ச்சவர்கள் மீது கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்…
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]