• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நீர் பிடிப்பு பகுதியில் கொட்டப்பட்டு வரும் குப்பைகளை அகற்ற கோரிக்கை..,

ByK Kaliraj

Jun 20, 2026

சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக வெம்பக்கோட்டை அணை உள்ளது. சிவகாசி நீரேற்றம் நிலையம். எதிரில் வைப்பாறு பகுதி நீர் பிடிப்பு பகுதியாக உள்ளது. இங்கு வெம்பக்கோட்டை ஊராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் அனுமதி இன்றி கொட்டப்பட்டு வருகின்றன.

குப்பைகளினால் மழைக்காலங்களில் தண்ணீர் மாசடைய வாய்ப்புள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீர் பிடிப்பு பகுதியில் கொட்டப்பட்டு வரும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.