• Thu. Apr 25th, 2024

சேலத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து – இடிபாடுகளில் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்பு

சேலத்தின் சிலிண்டர் வெடித்து விபத்தில் இடிபாடுகளில் சிறந்த பத்து வயதுக்குள் சிறுமி உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் 55 பேர் ஈடுபட்டு வரும் நிலையில் 20 பேர் கொண்ட குழுவினர் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் பேட்டி.

சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கநாதன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு கீழ்தளத்தில் குடியிருந்த கோபி என்பவர் வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் 4 வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளது. இதில் கோபியின் தாய் ராஜலட்சுமி உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் 13 பேர் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கிய பூஜாஸ்ரீ(10), கார்த்திக்ராம் (18), பத்மநாபன்(49), தேவி (36) ஆகியோரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் 3.30 அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு பூஜாஸ்ரீ உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீதம் உள்ள நபர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மீட்பு பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம், அருள் ஆகியோர் மேற்பார்வை இட்டு வருகின்றனர். கோவையில் இருந்து சிறப்பு மீட்பு குழுவினர் தற்போது வருகை தந்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறும்போது, எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் காயமடைந்த 11 பேரில் 90 சதவிகித தீக்காயங்களுடன் கோபி என்பவர் சேலம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தில்லை. தொடர்ந்து அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

மீட்பு பணியில் 55 பேர் ஈடுபட்டு வரும் நிலையில் 20 பேர் கொண்ட குழுவினர் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *