விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக சாதி மதம் அற்றவர்கள் என தம்பதியர் சான்றிதழ் வாங்கியுள்ளனர்.
சிவகாசி அருகே உள்ள தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). பட்டதாரி இளைஞரான இவர், கணினி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து விண்ணப்பத்தை பெற்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்றதொரு சான்றிதழ் இந்த தாலுகா அலுவலகத்தில் இதுவரை யாருக்கும் கொடுத்ததில்லை என்று கூறியுள்ளனர். அப்போது காத்திகேயன், இந்தியாவில் இதுவரை 7 பேர் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற்றுள்ளார்கள். அதில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி அதற்கான ஆதாரத்தை வழங்கியுள்ளார்.

பின்னர் சில நாட்களுக்குப் பிறகு அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி சர்மிளா ஆகிய இருவருக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழை வழங்கியுள்ளனர். இது குறித்து கார்த்திகேயன் கூறும்போது…
எனது சொந்த ஊர் சிவகாசி தான். நான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சாதி, மதம் அற்றவன் சான்றிதழ் கேட்டு மனு கொடுத்தேன். ஆனால் அப்போது இருந்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பின்னர் சான்றிதழ் பெற தேவையான ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கினேன். இணையத்தில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தது. இந்நிலையில், கடந்த 2018-ல் வக்கீல் சினேகா என்பவர் இதே போன்ற சான்றிதழை பெற்றிருந்தார். இதை ஆதாரமாக வைத்து தற்போது எனக்கும், எனது மனைவிக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழ் பெற்றுள்ளேன். நான் சுயமாக தொழில் செய்து வருகிறேன். எனது மனைவி சர்மிளா உதவி பேராசிரியராக பணியாற்றி தற்போது விடுப்பில் உள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் நேசன் (4) தற்போது தனியார் பள்ளி ஒன்றில் யு.கே.ஜி. படித்து வருகிறான். அவனுக்கும் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறேன். மேலும் 2வது மகன் கரிகாலனுக்கு தற்போது 2 வயதுதான் ஆகிறது. அவனுக்கும் இதே சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளேன் என்று கூறினார்.
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]
- ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகளுக்கு சிறைகர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து […]
- இன்று இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடு பிறந்த தினம்இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட தமிழகத்தின் அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு பிறந்த தினம் இன்று […]
- பெரம்பலூரில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேனர் வைத்த தி.மு.க பிரமுகர்..!பெரம்பலூரில் தி.மு.க பிரமுகர் ஒருவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக பேனர் வைத்துள்ளதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.பெரம்பலூர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேரங்கோடு கிராம சபைக் கூட்டம்உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கையுன்னியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து சேரங்கோடு […]
- கிருஷ்ணகிரி ஆணவக்கொலை..,
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம்..!கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன […] - புதுச்சேரியில் தண்ணீர் விழிப்புணர்வு குறித்த ‘வாட்டர் மேட்டர்ஸ் மேளா’..!ஒரு வருடத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.உலக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உங்களை நிர்ணயிக்கும் இரண்டு விஷயம். 1) உங்களிடம் ஒன்றுமில்லாதபோது நீங்கள் காக்கும் பொறுமை.2) உங்களிடம் […]
- இன்று உலக வானிலை நாள்உலக வானிலை நாள் (World Meteorological Day) (மார்ச் 23).உலக வானிலை நாள் ( World […]
- இன்று எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய அமாலி எம்மி நோய்தர் பிறந்த தினம்இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய ஜெர்மானிய கணிதவியலாளர் அமாலி எம்மி நோய்தர் பிறந்த […]