கன்னியாகுமரிமாவட்டம் அரசுபோக்குவரத்து கழகம் ராணிதோட்டம் பணிமனை கிளை-2 மேலாளர் வேல்முருகன் அங்கு பணியாற்றும் நடத்துனர் ஜெகனிடம் 5000 ரூபாய் லஞ்சம் கேட்டதை கலெக்டரிடம் புகார் கொடுத்தார் என்பதற்காக பணி இடைநீக்கம், பணி இடமாற்றம் என ஒருதலைபட்சமாக சாதியபாகுபாடு பார்த்து அதிகார துஸ்பிரோயகம் செய்து ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதோடு, தொடர்ச்சியாக தலித் பணியாளர்கள் மீது தீண்டாமையை தீவிரமாக கடைபிடிக்கும் குமரிமாவட்ட அரசு போக்குவரத்துகழக அதிகாரிகளை கண்டித்தும்,
குமரி மாவட்ட போக்குவரத்துக் கழகத்தில் தலித் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பும், உயிர் பாதுகாப்பும் ஏற்படுத்திக் கொடுக்க கோரியும்,அரசு பணத்தை விரயம் செய்து அது பத்திரிக்கை செய்தியாக வந்து அரசு போக்குவரத்து கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதோடு குமரிமாவட்ட அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் அஜித்குமாரை சலூன் வைத்து சிரைக்க போ என்று கூறி சாதி பெயரால் இழிவுபடுத்திய குமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் (வணிகம்) ஜெரோலின் லிஸ்பென்சிங் மீது உடனடியாக தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க கோரியும்,5000 ரூபாய் லஞ்சம் கேட்டு கொடுக்காததால் கொலைமிரட்டல் விடுத்த ராணிதோட்டம் கிளை-2 பொறுப்பு மேலாளர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யகோரியும்,நடத்துனர் ஜெகன் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்ய கோரியும்,குற்றவாளிகள் தனது உறவினர் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் குமரி மாவட்ட போக்குவரத்து துறை பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தியை கண்டித்தும்,தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக கடந்த 12-01-2023 அன்று காலை 9:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை 10 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து நடத்தியது.அதன்பின்பு தமிழக அரசும், காவல் துறையும், போக்குவரத்து துறையும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காததால் இரண்டாம் கட்டமாக 19-01-2023 அன்று காலை 9.30 முதல் மாலை 7.00 மணி வரை குமரி மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி 26.01.2023 குடியரசு தினவிழா அன்று குமரி மாவட்டம் முழுவதும் காலை 9:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை 30 நடத்துனருக்கு நீதி வழங்கண்ணில் கருப்பு துணி கட்டி, கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்திருந்த நிலையில் குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு தற்காலிகமாக 10 நாட்கள் மட்டும் போராட்டம் நடத்துவதை வாபஸ் பெறுவதாக தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்தது.
ஆனால் இதுவரையில் குமரிமாவட்ட நிர்வாகமோ, குமரிமாவட்ட காவல்துறையோ, போக்குவரத்துதுறையோ கோரிக்கை மீது எந்தவித முதற்கட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே 09.02.2023 காலை 11:00 மணி முதல் மேற்படி கோரிக்கை மீது தீர்வு கிடைக்கும் வரை குமரிமாவட்ட போக்குவரத்துதுறை பொதுமேலாளர் அலுவலகம் ராணிதோட்டம் முன்பாக காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்துவதாக தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்து இன்று முதல் நடத்தி வருகிறது.நாகர்கோவில் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பொறுப்பு திரு.ராஜா அவர்கள் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.
உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வதாக தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்து போராட்டத்தை நடத்தி வந்த நிலையில் நாகர்கோவில் சரக டிஎஸ்பி பொறுப்பு திரு.ராஜா, குமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தி அரசு போக்குவரத்து கழக மாவட்ட மேலாளர் சுனில், வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மதனகலா ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் சட்ட ஆலோசகர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் நடத்துனர் ஜெகனின் குழித்துறை பணிமனை பணியிட மாற்றம் போக்குவரத்து துறை அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் உடனடியாக பணி கொடுப்பதாக குமரி மாவட்ட அரசு போக்குவரத்து துறை பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி கொடுத்த வாக்குறுதியை ஏற்று தொடர் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது நடத்துனர் ஜெகனுக்கு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.
- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]