திறந்த வெளியில் உள்ள நெல் குடோன்களுக்கு விரைவில் கட்டிடம் கட்ட வேண்டும் என மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், அமைப்புச் செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது..,
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட, ஆஸ்டின்பட்டி மற்றும் மேலக்குயில் பகுதிகளில் திறந்த வெளிகளில் உள்ள நெல்குடோன்களில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல் முளைத்திருக்கிறது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. நான் ஏற்கெனவே சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் தோப்பூர் ஆஸ்டின்பட்டியில்; சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சம் கொள்முதல் கொண்ட நெல்குடோன் திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும் என சட்டப்பேரவையில் நான் கோரிக்கை வைத்தேன். அப்போது சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி, வருங்காலங்களில் திறந்தவெளியில் நெல்குடோன்கள் இருப்பதை ஆய்வுமேற்கொண்டு உரிய கட்டிடங்கள் கட்டப்படும் எனத் தெரிவித்தார்.
ஆனால், கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் நெல் மூடைகள் அனைத்தும் முளைத்திருப்பதையும், தார்ப்பாய்கள் இல்லாமல் அனைத்தும் அழுகிய நிலையில் இருப்பதையும் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார். இதற்கு இந்த அரசே முழுபொறுப்பையும் ஏற்று வருங்காலங்களில் விவசாயிகளின் நலன் கருதி திறந்த வெளியில் உள்ள நெல்குடோன்கள் அனைத்திற்கும் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், அரசையும் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
- நினைவில் இருந்து விலகாத ஹிரோஷிமா, நாகாசாக்கி குண்டு வீச்சு நாள்…77 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வீழ்த்த அந்நாட்டின் ஹிரோஷிமா, நாகாசாக்கி நகரங்களில் அணுக்குண்டு […]
- சீமானின் சொகுசு காரும்..கிளம்பிய சர்ச்சையும்நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாங்கியுள்ள சொகுசு கார் புதிய சர்சைகளை கிளப்பியுள்ளது.நாம் தமிழர் […]
- சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணை தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வுதமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச செஸ் கூட்டமைப்பு துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சென்னையில் 44வது செஸ் […]
- பொது அறிவு வினா விடைகள்விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு ?நாய் விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின் பெயர் ?லைகா முதன் […]
- இன்றைய ராசி பலன்மேஷம்-சாந்தம் ரிஷபம்-வெற்றி மிதுனம்-விருத்தி கடகம்-லாபம் சிம்மம்-உயர்வு கன்னி-முயற்சி துலாம்-யோகம் விருச்சிகம்-பரிவு தனுசு-பிரீதி மகரம்-நன்மை கும்பம்-நட்பு மீனம்-வெற்றி
- வடதமிழக மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் • வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும் தோல்விகளையும்எதிர்கொள்ள தயாராக இருந்தால் எவராலும் எதுவும் கற்க முடியும். […]
- தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை இடமாற்றம்தமிழகத்தில் 76 போலீஸ் டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.சென்னை பொருளாதார குற்றப்பிரிவு […]
- குறள் 271வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும். பொருள் (மு.வ): வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய […]
- அப்பு எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ் வழங்கியபிரகாஷ்ராஜ் !மறைந்த கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் நினைவாக ஏழைகளுக்காக சேவை செய்துவரும் மருத்துவமனை ஒன்றுக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை […]
- ஆபாச படங்களில் நடிக்க மட்டேன்-இந்தி சூப்பர்ஸ்டார் அக்க்ஷய்குமார் !குடும்பங்கள் கொண்டாடும் வகையில், வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்று இந்தி நடிகர் அக்ஷய் குமார் […]
- இந்தியை எதிர்க்கவில்லை உதயநிதி ஸ்டாலின் அதிரடி!ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கான் நடித்துள்ள ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக […]
- வானரமுட்டியில் கலைஞரின் நினைவு தினம் அனுசரிப்பு.தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டியில் மறைந்த முன்னாள் முதல்வரும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 4 […]
- மதுரை மீனாட்சி திருக்கோவில் ஆடி முளைக்கட்டு உச்சவ விழாவில் தங்க குதிரை வாகனத்தில் அம்பிகை மீனாட்சி தேவி எழுந்தருளிய காட்சி…
- ஆண்டிபட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு …தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான விழா […]