• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் கட்சியினர் ஒருபோதும் அரசியல் செய்ய மாட்டார்கள்..,

ByPrabhu Sekar

Oct 25, 2025

செம்பரம்பாக்கத்தில் நடைபெற்றது அதிகாரிகளுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கருத்து வேறுபாடு இதற்கும் ஆட்சிக்கும் சம்பந்தமில்லை

தமிழக முதலமைச்சர் ஒரு பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் அவருக்கு நிகர் ஏதுமில்லை. மழையாக இருந்தாலும் புயலாக இருந்தாலும் களத்தில் நிற்கிறார்

எங்களுக்கோ ஆட்சிக்கோ அமைச்சர்களுக்கோ பிரச்சனை இல்லை அங்கு இருக்கும் ஒரு சில அரசு அதிகாரிகள் செய்கின்ற தவறால் ஆட்சிக்கு புத்தகம் வரக்கூடாது என்கிறதை தடுத்து நிறுத்தவே முயற்சி செய்கிறோம்

பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் இருந்து காமராஜர் காலத்தில் நீர் மேலாண்மையில் முன்னேற்றம் இருந்தது ஆனால் கடந்த 2023 பிறகு உள்ள இரண்டு வருடங்கள் அதில் குறை ஏற்பட்டுள்ளது அது யாரால் அரசு அதிகாரிகளால் தான்.

மக்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாலமாக இருப்பவர்கள் தான் அதிகாரிகள். ஏன் தகவல் சொல்லவில்லை என்று கேட்கிறோமே தவிர அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லவில்லை.

இவை கூட பரவாயில்லை தண்ணீர் திறந்து விடுவதை கூறுவது கட்டாயம் இல்லை என அதிகாரிகள் கூறிய வார்த்தை என்னை தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளது.

நான் உங்களை வாழையிலை போட்டு சாப்பிட கூப்பிடவில்லை என கூறவில்லை எங்களை அழையுங்கள் என்று தான் கூறுகிறோம். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தண்டோரா போட்டு கூறினார்கள். அப்பொழுதுதான் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை எங்களால் அவர்களிடம் சொல்ல முடியும்

மூத்த அமைச்சர் நான் மதிக்கக் கூடிய அமைச்சர் கழகத்தின் மூத்த உறுப்பினர் மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் இது போன்று கூறுவது தான் வருத்தமாக உள்ளது

விஜய பொறுத்தவரை அன்று நேராக சென்று மக்களை சந்தித்திருக்க வேண்டும் ஆனால் நான் அதற்குள் போகவில்லை துயர சம்பவத்தை வைத்து காங்கிரஸ் கட்சியினர் ஒருபோதும் அரசியல் செய்ய மாட்டார்கள்.