அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் காங்கிரஸ் இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஏற்று அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் காங்கிரஸ் இணைந்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் பிரதிநிதியாக வீரப்ப மொய்லியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.