அரசு திட்டங்களின் மூலம் ஏழைகள் வீடு கட்டி லட்சாதிபதிகளாக மாறி வருகின்றனர் என்று மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு.
டெல்லி நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, பாடகி லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தினார். பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடியது லதா மங்கேஷ்கரின் சிறப்பு என்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்துள்ளார் எனவும் புகழாரம் சூட்டினார்.
இதன்பின் ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்களுக்கு பதிலளித்து வரும் பிரதமர் மோடி, கொரோனாவுக்கு பிறகு உலகில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு பிறகு இந்தியா முன்னேற்ற பாதையில் சென்று கொண்டியிருக்கிறது. கொரோனாவுக்கு பிந்தைய சூழலில் உலகின் தலைமை நாடுகளில் ஒன்றாக மாற வேண்டும்.
உலகளவில் இந்தியாவின் குரல் ஒலிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மத்திய அரசு திட்டங்களால் லட்சாதிபதி என்ற நிலைக்கு ஏழைகளின் நிலை உயர்ந்துள்ளது. அரசு திட்டங்களின் மூலம் ஏழைகள் வீடு கட்டி லட்சாதிபதிகளாக மாறி வருகின்றனர். ஏழைத்தாய்கள் சமையல் எரிவாயு திட்டம் மூலம் பயனடையும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் இன்று ஏழை மக்கள் வீடு, கேஸ் இணைப்பு, மற்றும் சொந்த வங்கிக் கணக்குகளை பெற்றுள்ளனர். ஆனால், எதிர்க்கட்சியினர் மனம் இன்னும் 2014 காலக் கட்டத்திலேயே சிக்கியுள்ளது என்று மறைமுகமாக விமர்சித்தார். ஏழைகளின் வங்கி கணக்கில் பணம் நேரடியாக சென்று சேர்கிறது.
1962-க்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை என்றும் பல மாநிலங்களில் காங்கிரேஸை ஆட்சியில் அனுமதிக்க மக்கள் விரும்பவே இல்லை எனவும் தமிழகத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என ராகுல்காந்தி பேசியதற்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பல இடங்களில் கைவிட்டு போன பிறகும் அகங்காரம் குறையவில்லை என்றும் குறிப்பிட்டார்.
- மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு..!மதுரை மாவட்டம், மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் […]
- இன்று இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் நினைவு நாள்துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ள, இந்திய […]
- கள் விற்பனை செய்தவர்கள் கைது..!மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் […]
- திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் திருடிய டூவீலரை மதுரையில் விற்க முயன்ற 2 பேர் கைதுதிருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் நூதன முறையில் விலையுயர்ந்த டூவீலரை திருடி., மதுரையில் ஒரிஜினல் RC […]
- ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் நிறுவனம்..!ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை […]
- ஆதார் விவரங்களை இலவசமாக மாற்ற 8 நாட்களே உள்ளன!அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்படும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது.ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு […]
- டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய […]
- திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலிமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]