• Fri. Apr 19th, 2024

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டி ? அண்ணாமலை ஆலோசனை

ByA.Tamilselvan

Jan 20, 2023

கடலூரில் நடைபெறும் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் ஈரோடு தேர்தல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆலோசனை.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடலூரில் நடைபெறும் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ராமர் பாலம் பாதிக்காமல் சேது கால்வாய் திட்டம் அமைப்பது. கட்சி வளர்ச்சிப்பணி குறித்து விரிவாக ஆலோசிப்பது. புதுக்கோட்டையில் நடந்த பட்டியலின கொடுமைக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்க வலியுறுத்துவது. ஏப்ரல் 14-ந் தேதி திருச்செந்தூரில் நடைபயணம் மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கடலூர் வந்த மாநில தலைவர் அண்ணாமலைக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *