தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் திரில்லராக உருவாகி இருக்கும் படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”
Kpr institution coimbatore Fessta ’23 கல்லூரி விழாவில், 6000 மாணவர்கள் மத்தியில், மாணவர்களின் உற்சாக கரவொலிகளுக்கு இடையில், மாணவர்கள் கைகளால் பருந்தாகுது ஊர் குருவி படத்தின் முதல் லிரிகல் பாடலான ‘மதயானைக்கூட்டம்’ பாடல் வெளியிடப்பட்டது.சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மதயானைக்கூட்டம் பாடல் இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி இசையில் அவரும் ராகுல் நம்பியாரும் இணைந்து பாடியுள்ள இப்பாடலை, பாடலாசிரியர் விதாகர் எழுதியுள்ளார். படத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடல், படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும், இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனைத் தொடர்ந்த அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை. அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாகப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது.



இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையைப் படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். ‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’ எனும் கருத்தில், இளைஞர்கள் குழுவின் முயற்சியில், திரில் பயணமாக உருவாகியுள்ளது “பருந்தாகுது ஊர் குருவி” படம்.இப்படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இயக்குநர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media தனது முதல் படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா P.,வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்..,எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து..!அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமியை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் […]
- சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய […]
- குறள் 414கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்குஒற்கத்தின் ஊற்றாந் துணை. பொருள் (மு.வ): நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய […]
- திண்டுக்கல்லில் பெண்களுக்கு விடப்படும் இலவச பேருந்துகளில்..,
கட்டணம் வசூலிப்பதாக புகார்..!திண்டுக்கல் ரயில்வே நிலையத்திற்கு அதிகாலை நேரத்தில், தமிழக அரசு பெண்களுக்கு விடப்படும் இலவச பேருந்துகளில் கட்டணம் […] - சிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு ரூ. 9 லட்சம் செலவில் சாலை வசதிசிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாலை வசதி அமைத்து கொடுக்கப்பட்டது.விருதுநகர் […]
- திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேரை இழுக்க கிராம மக்களுக்கு அழைப்பு..!மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி […]
- பீகார் மாணவிகள் நாகர்கோவிலில் கல்வி பயில்வது தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு -தமிழிசைபீகாரில் இருந்து மாணவிகள் இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர் இதை பார்க்கின்ற போது தேசிய […]
- ஏப்ரல் 1ம் தேதி ஆளுநர் ஆர்என்.ரவி ராஜபாளையம், சிவகாசிக்கு வருகைவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் உள்ள கல்லூரிகளின் விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து […]
- முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைஆபத்தான இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை.தென் தமிழ்நாட்டில் […]
- மதுரையில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த கூட்டம்மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் […]
- நீலகிரி அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]
- மஞ்சூர் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக […]
- ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா- இயக்குநர் வம்சி -தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் […]
- உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளதுஉக்ரைன் மற்றும் […]