• Sun. Jun 7th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வேன் மோதியதில் கல்லூரி மாணவி படுகாயம்

ByPrabhu Sekar

Feb 17, 2025
நேற்று கிண்டி காவல் நிலையம் அருகே கல்லூரி மாணவியை இடித்து படுகாயம் ஏற்படுத்திவிட்டு லோடு வேன் நிற்காமல் தப்பி சென்றது.

சென்னை கிண்டி காவல் நிலையம் அருகே சண்முகரம்யா/23 என்ற பெண்
கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்கு நேர்முக தேர்வுக்காக நடந்து செல்லும் போது விபத்து.

சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதியில் நடந்து செல்லும் போது லோடு வேன் ஒன்று ரம்யாவை இடித்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. காயங்களோடு அந்தபெண் சிகிச்சை பெற்றுள்ளார்.