சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் சென்னையை சுத்தம் செய்யும் பணி பல்வேறு கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர தமிழக அரசு முயற்ச்சி முற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் கடந்த மாதத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட கழிவுகள் மற்றும் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள், கட்டடக் கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப் பணிகள் நாளை தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளன.