கிராமசபை கூட்டங்களை போல் தமிழ்நாட்டில் முதல்முறையாக நகரசபை, மாநகரசபை கூட்டங்கள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நவ.1ம் தேதி ஒவ்வொரு வார்ட்டிலும் நடைபெறவுள்ள நகரசபை ,மாநகரசபை கூட்டங்களில் மக்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கவேண்டும் என்றும் சென்னை பம்மல் 6வது வார்டு மாநகர சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.