• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிதம்பரேஸ்வரர் கோயில் திருக்கல்யாணம்..,

ByRadhakrishnan Thangaraj

Aug 31, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சிதம்பரேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னிட்டு கொடி மரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. தினசரி மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது .3 ம் நாள் திருவிழாவான திருக்கல்யாணம் இந்து அறநிலை துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மாயூர்நாதர் கோவில் பட்டர் கார்த்திக் மற்றும் வேத பட்டர்கள் வேத மத்திரங்கள் மூலங்க . சுவாமிக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுகிற்றது

முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த திருக்கல்யாணத்தில் இராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாள் தரிசனம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.