• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாக்கு எண்ணும் பணி தீவிரம்..

Byகாயத்ரி

Feb 22, 2022

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து சற்றுமுன் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

சற்றுமுன் நிலவரப்படி மாநகராட்சி பகுதியில் திமுக 21 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் பேரூராட்சி பகுதியில் திமுக 167 இடங்களிலும், அதிமுக 23 இடங்களிலும், மற்றவை 527 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நகராட்சி பகுதியில் திமுக 22 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.