அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .அவரது உடலுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் பலரும் உடன் சென்று அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தேவராஜ் சென்னை ஓட்டோரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவராஜின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.