சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அருங்காட்சியகத்தை திறந்துவைத்து முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு செல்பி எடுத்துக்கொண்டார்.
’கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள வளர்ச்சி பணிகள், சட்டம் – ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் 3 நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள், காவல் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.அதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.18.43 கோடி மதிப்பில் தமிழ்நாட்டின் மரபுசார் கட்டிடக்கலை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திறந்து வைத்தார் இதனைத்தொடர்ந்து அங்கு நின்று தனது செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.