செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு 2 நாள் பயணமாக வருகை புரிந்தார். நேற்று மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவக்கி வைத்த அவர். இன்று அண்ணாபல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
இந்நிலையில் “சென்னைபயணத்தின் நினைவலைகள்” என்ற தலைப்பில் பிரதமர் மோடி தன்ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்த அவர் இரவில் ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார். அப்போது தமிழக பாஜக நிர்வாகிகளை சந்தித்தார். இன்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு டெல்லி கிளம்பிய நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.