• Fri. Apr 26th, 2024

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 2ம் பருவ பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பொதுத்தேர்வு ஏப்ரல் 26ம் தேதி முதல் நேரடியாக நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஓமைக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2ம் பருவ பொதுத்தேர்வு ஏப்ரல் 26ம் தேதி முதல் நேரடியாக நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *