தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சியான அதிமுக பாஜக தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உள்ளூர் அளவிலான பிரச்னைகள் எதிரொலிக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு, தலைவர்கள் தேசிய பிரச்னைகளையும் மாநில அளவிலான பிரச்னைகளையும் பேசி வருவதால் இது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலா அல்லது சட்டமன்றத் தேர்தலா அல்லது மக்களைத் தேர்தாலா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வழியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரிய திரைகள் வைத்து மு.க.ஸ்டாலினின் பிரச்சார உரை திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒளிபரப்பப்படுகிறது. அதே போல, திமுக அமைச்சர்கள் பலரும் அவரவர் மாவட்டங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் நேரில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதிமுகவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவை கடுமையாக தாக்கி பிரசாராம் செய்து வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாஜகவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தனித்து தைரியமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் வெற்றியை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று ஆளும் திமுகவை கடுமையாக தாக்கி வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தலைவர்கள் உள்ளூர் பிரச்சனைகளை பேசுவார்கள், உள்ளூர் அளவிலான கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளித்து பிரச்சாரம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தால், பெரும்பாலும் தேசிய பிரச்னைகளையும் மாநில அளவிலான பிரச்னைகளையும் முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதனால், இது உள்ளாட்சித் தேர்தலா அல்லது சட்டமன்றத் தேர்தலா அல்லது மக்களவைத் தேர்தலா என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜக தலைமையிலான மத்திய அரசையும் கடுமையாகத் தாக்கி வருகிறார். அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, திமுக ஆட்சியில், மாநிலத்தில் போதுமான வளர்ச்சி என்றும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாகவும் விமர்சித்து வருகிறார்.
கடந்த ஆண்டு மழை வெள்ளப் பாதிப்பின் போது திமுக அரசின் நடவடிக்கையை சுட்டிக்காட்டி அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். திமுக அரசு இன்னும் நீட் தேர்வு விலக்கு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று விமர்சித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் வழக்கமான தேர்தல் பிரச்சாரமாகவே அமைந்துள்ளது. திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், உள்ளாட்சித் தேர்தலில் தேசிய பிரச்னைகள் ஒன்றுமில்லை. இது மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் எதிர்க்கட்சியான அதிமுக தலைவர்களும் பாஜக தலைவர்களும் உள்ளூர் பிரச்னைகளை விடுத்து தேசிய பிரச்னைகளைப் பேசி பிரச்சாரம் செய்து வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் தேசிய பிரச்சனைகளைப் பேசி திசைமாறி பிரச்சாரம் செய்யும் தலைவர்களைப் பார்க்கும் அரசியல் நோக்கர்கள், இது உள்ளாட்சித் தேர்தல்னு யாராவது சொல்லுங்கப்பா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
- இன்று இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் நினைவு நாள்துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ள, இந்திய […]
- கள் விற்பனை செய்தவர்கள் கைது..!மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் […]
- திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் திருடிய டூவீலரை மதுரையில் விற்க முயன்ற 2 பேர் கைதுதிருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் நூதன முறையில் விலையுயர்ந்த டூவீலரை திருடி., மதுரையில் ஒரிஜினல் RC […]
- ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் நிறுவனம்..!ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை […]
- ஆதார் விவரங்களை இலவசமாக மாற்ற 8 நாட்களே உள்ளன!அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்படும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது.ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு […]
- டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய […]
- திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலிமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]