• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஈரோடு தேர்தலில் அண்ணாமலைப் போட்டி போடலாமே?வம்பிழுக்கும் காயத்ரி ரகுராம்

ByA.Tamilselvan

Feb 4, 2023

திமுகவை தோற்கடிக்க அண்ணாமலையால் மட்டுமே முடியும் என்றால் ஈரோடு தேர்தலில் போட்டியிடலாமே என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காயத்திரி ரகுராம்.
காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் 8 ஆண்டுகள் பாஜகவால் வளர்க்கப்பட்டேன். எனது அரசியல் பயணத்தில் பாஜகவும், மோடி ஜியும் முக்கிய பங்கு வகித்தனர். நான் கட்சியை விட்டு வெளியேறினாலும், எனக்கு பிடித்த தலைவர்கள் மீதான எனது மரியாதை அப்படியே உள்ளது. இப்போது நான் சுதந்திரமாக இருக்கிறேன், உண்மையையும் உரிமையையும் பேசுவேன். என்னைப் பற்றி வார்ரூம் மூலம் தவறான செய்திகளைப் பரவி தூண்டி, என் புகைப்படத்தை மார்பிங் செய்து, பிளாக் மெயில் செய்து மிரட்டியவர்கள் மீதுதான் எனக்குக் கோபம். அத்தகைய மலிவான கதாபாத்திரங்கள் எப்போதும் என் தலைவராக இருக்க முடியாது. சில தலைவர்கள் இதுபோன்ற மோசமான செயல்களை ஊக்குவித்தார்கள். மற்றும் கண்டிக்கவில்லை.


அந்த வகையில் TNBJP கூட எனக்கு துரோகம் செய்தது. ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம் என்று சொல்ல வேண்டும் அல்லது கூட்டணி கட்சியை ஆதரிக்கப் போகிறோம் என்று சொல்ல தைரியம் வேண்டும். மாறாக அவர் மற்ற மைதானத்தில் referee நடுவராக விளையாடுகிறார். மைதானத்தில் சக வீரராக இருங்கள்.. referee நடுவராக இருக்க வேண்டாம். Just a thought.. அவ்வளவு சக்தி வாய்ந்த அண்ணாமலையால் மட்டுமே திமுகவை தோற்கடிக்க முடியும் என்று கதறும் வார்ரூம் ஆனால் வலுவான வேட்பாளரை ஏன் தேட வேண்டும்? அண்ணாமலைப் போட்டி போடலாம். ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தென்னரசு அய்யாவை விட அவர் வலுவான வேட்பாளரா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.