• Thu. Mar 28th, 2024

ஜம்மு காஷ்மீரில் பேருந்துகளில் குண்டு வெடிப்பு

ByA.Tamilselvan

Sep 29, 2022

ஐம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டு வெடிப்பு . ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உதம்பூர் நகரில் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இன்று காலை குண்டுவெடித்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. உதம்பூர் நகரில் சில மணி நேரங்களுக்குள் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும். நேற்று இரவு டோமெயில் சௌக்கில் உள்ள பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இருவர் காயமடைந்தனர். இன்று அதிகாலை 5.40 மணியளவில் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வாகனம் பலத்த சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *