புடின் நினைத்ததுபோல அவ்வளவு எளிதாக உக்ரைனை மண்டியிடவைக்க முடியவில்லை.
ரஷ்ய தரப்பில் கடும் இழப்பு, முக்கிய தளபதிகள் முதல் ஏராளம் வீரர்களை இழந்து தவிக்கிறது ரஷ்யா.
புடின் பேச்சை நம்பி உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர்கள், சரியான உணவு கூட இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
ஆக, போரை முடித்துக்கொள்வதுதான் இப்போதைக்கு ரஷ்யாவுக்கு ஒரே வழி. ஆனாலும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டக்கூடாது என்பது போல, தாங்கள் வெளியேறவேண்டுமானால், உக்ரைன் சில நிபந்தனைகளுக்கு உட்படவேண்டும் என ரஷ்யா எதிர்பார்க்கிறது.
ரஷ்யாவின் நிபந்தனைகளில் ஒன்று, உக்ரைன் தனது இராணுவ பலத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்பதாகும். ரஷ்யா, அதற்கு demilitarise என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது. அந்த வார்த்தைக்கு, இராணுவமயமற்றதான நாடாகுதல், அதாவது, இராணுவத்தை குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது மொத்தமாகவோ அகற்றுதல், இராணுவ பலத்தைக் குறைத்துக்கொள்ளுதல் என வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன.
எப்படியும் ரஷ்யாவின் நிபந்தனைப்படி உக்ரைன் தனது இராணுவ பலத்தைக் குறைத்துக்கொள்கிறது என்றே வைத்துக்கொள்வோம். வெளியேறுகிறோம் என்று கூறிய ரஷ்யா மீண்டும் தாக்கினால் உக்ரைனின் நிலைமை என்ன ஆகும்?
ஆகவே, ரஷ்யாவின் நிபந்தனைக்கு எதிர் நிபந்தனை ஒன்றை வைத்துள்ளது உக்ரைன். தாங்கள் இராணுவ பலத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டுமானால், தங்கள் பாதுகாப்புக்கு மேற்கத்திய நாடுகள் உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்று கோரியுள்ளது உக்ரைன்.
இந்நிலையில், பிரிட்டனும், அதன் சர்வதேச கூட்டாளிகளும் உக்ரைனின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, மீண்டும் ரஷ்யா உக்ரைனைத் தாக்கினால், பிரிட்டனும் , அதன் சர்வதேச கூட்டாளிகளான நாடுகளும் ரஷ்யாவுக்கெதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும்.
ஆக, ரஷ்ய அமைதி ஒப்பந்தத்தின்படி, பிரிட்டன் உக்ரைனின் எதிர்கால பாதுகாவலராக மாறலாம் என நேற்று இரவு தகவல் வெளியாகியுள்ளது.
- மாலை அணிந்து கொடுங்கலூர் சென்ற பக்தர்கள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான கொடுங்கலூர் பகவதி அம்மன் கோவிலுக்கு மாலை […]
- ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மஞ்சூரில் ஆர்ப்பாட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் குந்தா வட்டார காங்கிரசின் சார்பில் ராகுல்காந்தி அவர்கள் மீது […]
- குந்தா அணையில் குப்பைகளை அகற்ற முன்னோட்டம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா அணையில் தங்கி உள்ள குப்பைகள் செடி, கொடி இலை அகற்றும் […]
- 2022-2023 ஆம் ஆண்டிற்கான கணிதக் கண்காட்சிநீலகிரி மாவட்டம் மஞ்சூர் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு பெண்கள் உயர்நிலைப் நிலைப் […]
- தேசிய பங்குசந்தை பட்டியலில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்தமிழ் திரையுலகில் அதிக படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், […]
- மதுரை அருகே சந்தன கட்டைகள் கடத்திய 2 பேர் கைதுமதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி […]
- லைஃப்ஸ்டைல்:புதினா சுருள்சப்பாத்தி: தேவையானவை:கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு […]
- காவிய நாயகி வேடத்தில் சமந்தா..!காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலம் என்ற திரைப்படத்தில் காவிய நாயகி வேடத்தில் சமந்தா நடித்துள்ளார்.தென்னிந்தியாவின் […]
- சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டிஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு […]
- ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதுராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது எம்.பி பதவியை பறித்து […]
- முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கல்தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கியமதுரை 70 வது […]
- ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் […]
- N4 திரை விமர்சனம்சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் யாரையும் நம்பி யாருக்காகவும் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்;இறுதியில் நம்மை கோமாளி ஆகிவிட்டு அவர்கள் ஒன்றாக […]
- இன்று நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த தினம்X-கதிர் சிதறலில் சிறப்பான பங்களிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற பீட்டர் யோசப் வில்லியம் டெபி பிறந்த […]