பெரும்பாலும் 90ஸ் கிட்ஸ்களின் உச்சபட்ச கனவு என்றால் அது திருமணத்தை பற்றிதான் இருக்கும். ஏன் 90ஸ் கிட்ஸ்களை மட்டும் குறிப்பிடப்படுகிறது என்றால் இடைப்பட்ட காலகட்டத்தில் அதாவது அறிவியில் இல்லாத உலகயைும் அறிவியில் மேம்பட்ட உலகையும் ஒன்றுசேர பார்த்துள்ள ஒரே தலைமுறை இதுதான். அவர்களுக்கு முன் இருக்கும் தலைமுறையும் சரி பின் இருக்கும் தலைமுறையும் சரி திருமண அதிர்ஷ்டம் அவர்களுக்கு தான் உள்ளது என்பது 90ஸ் கிட்ஸ்களின் மன நிலை. ஆகவே இதை வைத்து பலரும் மீம்ஸ்களை உருவாக்கி மகிழ்வித்து வருகின்றனர். இப்படி திருமணம் மீது ஆர்வம் கொள்ளாதவர்களே இல்லை என்று நாம் நினைத்திருப்போம். அது முற்றிலும் பொய் என்பதை தென் கொரியாவின் இளைஞர்கள் நிரூபித்துள்ளார்கள். அடேங்கப்பா… இது நம்ம லிஸ்ட்டுலே இல்லையே..!
தென் கொரியாவில் திருமணம் குறித்த இளைஞர்களின் மனப்பான்மை மாறி வருவதால், 2021-ம் ஆண்டில் திருமணம் செய்துகொள்ளும் தென் கொரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. இதற்கு கொரோனா தொற்றும் ஒரு காரணம். தென் கொரியாவால் வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ள தென் கொரியாவில், திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,93,000 ஆக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 9.8 சதவீதம் குறைவானதாகும்.இந்த எண்ணிக்கை 1970க்குப் பிறகு மிகக் குறைவு யோன்ஹாப் நியூஸ் ஏஜென்சி அறிக்கையில் வெளியான தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து 10வது ஆண்டாக திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக நல்ல வேலை கிடைக்காததால், தென் கொரிய இளைஞர்கள், டேட்டிங், திருமணம் மற்றும் குழந்தைகளைப் பெறுதல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். இது தவிர, கோவிட் -19 தொற்று பரவல் காரணமாக பல பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. தென் கொரிய ஆண்களின் சராசரி திருமண வயது கடந்த ஆண்டு 33.4 வயதை எட்டியதாக கூறுகிறது. முன்னதாக, மணமகளின் சராசரி திருமண வயது 31.1 ஆண்டாக இருந்ததாக கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் வெளிநாட்டு பெண்களை மணந்த தென் கொரியர்களின் எண்ணிக்கை 13,000 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டை விட 14.6 சதவீதம் குறைவானது. மேலும், நாட்டின் மொத்த திருமணங்களில் 6.8 சதவீதம் ஆகும். இதற்கிடையில், தென் கொரியாவில் விவாகரத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1,02,000 ஐ எட்டியது, இது கடந்த ஆண்டை விட 4.5 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவை பதிவு செய்துள்ளது. நாட்டில் 18.8 சதவீத ஜோடிகளின் திருமணம் 5 ஆண்டுகளுக்கும் குறைவாகவே நீடித்தது. கூடுதலாக, 17.6% ஜோடிகள் திருமணமாகி 30 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் ஆகின்றன. அதேசமயம், திருமணமான தம்பதிகளில் 17.1 சதவீதம் பேர் 5 முதல் 9 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

- எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவை கண் இமைபோல பாதுகாக்கிறது- ஜெயபிரதீப் அறிக்கைகண் இமைபோல எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவின் ஆன்மா அதிமுகவை பாதுகாப்பதாக ஓபிஎஸ் மூத்த மகன் ஜெயபிரதீப் அறிக்கை வெளியிட்டுள்ளார்பொதுக்குழுவுக்கு […]
- குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவருடன் சந்திப்பு மனநிறைவாக இருந்தது-ஸ்டாலின்இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவராக ஜெதீப் தன்கர் […]
- பிஜேபியின் முக்கிய பொறுப்பிலிருந்து நிதின் கட்காரி நீக்கம்பிஜேபியின் முக்கிய பொறுப்பிலிருந்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நீக்கப்பட்டுள்ளார்.பாரதியஜனதா கட்சியின் உயர்நிலை கொள்கை வகுக்கும் அமைப்பான […]
- ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மிக எழுச்சியோடு செயல்படும் – கோபாலகிருஷ்ணன் எம்பி பேட்டிஅதிமுக ஓபிஎஸ் தலைமையில் மிக எழுச்சியோடு செயல்படும் என முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன் பேட்டி.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கின் […]
- மதுரையில் தென்மண்டல அளவிலான பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள்மதுரையில் தென்மண்டல அளவிலான பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் துவக்கம். பல்வேறு மாநிலங்களில் […]
- மதுரையை காப்பாற்ற வேண்டும் -சு.வெங்கடேசன் எம்.பிமதுரையை காலநிலை மாற்றத்தின் ஆபாயத்திலிருந்து காப்பற்றவேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி பேச்சுமதுரை அமெரிக்கன் கல்லூரியில் நிகழ்ச்சி […]
- திருப்பரங்குன்றத்தில் ஆவணிமாதபிறப்பை முன்னிட்டு அஸ்ரத் தேவருக்கு சிறப்பு பூஜைதிருப்பரங்குன்றத்தில் ஆவணி மாதப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அறுபடை வீடுகளில் முதல் […]
- கட்சியை அடாவடியாக சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முடியாது -ஓபிஎஸ்அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா […]
- ஐகோர்ட்டு கூறியதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்- ஜெயக்குமார்…பொதுக்குழு செல்லாது என ஜகோர்ட் அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என முன்னாள் அமைச்சர் […]
- ஜெ.நினைவிடத்தில் கண்ணீர் விட்ட ஓபிஎஸ்…பொதுகுழு வழக்கு தீர்ப்புக்கு பின் ஜெ.நினைவிடம் சென்ற ஓபிஎஸ் கண்ணீர்விட்டு மரியாதை செலுத்தினார்.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் […]
- தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே அதிமுகவின் தலைமை குறித்து நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் […]
- உயர்நீதிமன்ற தீர்ப்பு. ஆண்டிபட்டியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்…அதிமுகவில் நிலவிய பிரச்சனையில் உயர்நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அதில் அதிமுகவில் ஜூன் 23ஆம் […]
- ஜவான் படத்தில் விஜய்சேதுபதி.. அவரே உறுதி செய்துள்ளார்!தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களையும் […]
- இபிஎஸ் சதி முறியடிப்பு- இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழுஇபிஎஸ் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும்,இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழு கூட்ட முடியும் எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை […]
- தர்மம் வென்றது… உற்சாக கூச்சலில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்…அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்றும் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை […]