• Mon. Jan 20th, 2025

வைகாசி மாத பூஜை தரிசனத்திற்கு முன்பதிவு தொடக்கம்…

Byகாயத்ரி

May 6, 2022

சபரிமலையில் வைகாசி மாத பூஜையில் பக்தர்களின் தரிசனத்திற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது. 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தரிசனம் செய்து கொள்ளலாம். மேலும் வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வருகின்ற 14ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கிறது. 15ஆம் தேதி அதிகாலை முதல் 19ஆம் தேதி இரவு வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்து கொள்ளலாம். அதற்கான ஆன்லைன் முன்பதிவு https:// sabarimalaonline.org என்ற இணைய தளத்தில் நேற்று தொடங்கியுள்ளது. மேலும் நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது.