தீபிகா படுகோன் ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்த படத்தில் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். தற்போது வரை மூன்று முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட 100 செல்வாக்குமிக்க ஆட்களில் ஒருவராக தீபிகா படுகோன் அறிவிக்கப்பட்டார். ஆரம்பகால கட்டத்தில் தனது சக நடிகரான ரன்பீர் கபூருடன் காதலில் விழுந்தார். பின்னர், இருவருக்கும் இடையிலிருந்த காதல் முறிந்தது. அதன்பின்னர் ரன்வீர் சிங்குடன் காதல் ஏற்பட்டு 2018ஆம் ஆண்டு இந்திய சம்பிரதாயப்படி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
75 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா கூடிய விரைவில் துவங்க உள்ளது. இந்த திரைப்பட விழாவில் தீபிகா படுகோன் நடுவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது ஒரு இந்தியருக்கு கிடைத்துள்ள கௌரவமாக பார்க்கப்படுகிறது. இவர்களோடு வேறு சில நாடுகளில் இருக்கும் அரிய திரை கலைஞர்களையும் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை பெயர் குறிப்பிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். கேன்ஸ் திரைப்பட விழா தங்களது அதிகாரபூர்வ வலைத்தளங்களில் இந்த தகவலை பதிவிட அதை தீபிகா படுகோன் ஷேர் செய்துள்ளார். அதோடு தனக்கு இந்த கௌரவத்தை கொடுத்ததற்காக ” நமஸ்தே ” எமோஜி சேர்த்துள்ளார். இதைப் பாராட்டும் விதமாக அவரது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் ” வாவ் ” எனும் எமோஜி போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]
- குறள் 449முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.பொருள் (மு.வ):முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் […]
- ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட ரஜினிகாந்த்இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் […]
- மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் – அமைச்சர் தகவல்சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுரத்து செய்யப்படுவதாக […]
- வீடியோ கேமுக்கு அடிமையான மாணவன் தற்கொலையை நேரடி ஒளிபரப்பு செய்த கும்பல்கேரளாவில் வீடியோ கேமுக்கு அடிமை; இன்டர்நெட்டில் நேரலையாக ஒளிபரப்பி மாணவனை தற்கொலை செய்ய வைத்த கும்பல்கேரள […]