• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மக்கள் குறைகளை கேட்டறிந்த பாஜக மாநிலத் துணைத் தலைவர்..,

ByRadhakrishnan Thangaraj

Nov 18, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கிருஷ்ணாபுரம். மேலப்பாட்டம். கரிசல்குளம் . திருவள்ளுவர் நகர், கம்பர் நகர், பராசக்தி நகர், வீரதர்மபுரம், ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் பாஜக மாநிலத் துணை தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோபால்சாமி பாஜக தொண்டர்களுடன் வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிற
2026 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கோரிக்கை வைத்து பொது மக்களை சந்தித்தார்

இந்த நாழ்ச்சியில் இராஜபாளையம் வடக்கு ஒன்றிய மண்டல தலைவர் சிவசக்தி, இராஜபாளையம் வடக்கு நகர தலைவர் ஜெமினி சுரேஷ் . தெற்கு நகர தலைவர் பிரேம் ராஜா , OBC அணி மாவட்ட தலைவர் சிவசங்கர், மற்றும் NGO மாவட்ட செயலாளர் வெங்கடேஷ பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை ஏற்பாட்டை OBC அணி மாவட்ட பொது செயலாளர் அபினேஷ்குமார் செய்திருந்தார் இந்த நிகழ்ச்சியில் ஏழு ஏழை மக்களுக்கு அரிசி . பலசரக்கு போன்ற பொருட்கள் வழங்கினர்.