• Sat. May 17th, 2025

பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று அஞ்சலி..,

ByR. Vijay

Apr 30, 2025

காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிர் நீந்தவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் விஜேந்திரன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

சிக்கல் கடைவீதியில் நடைபெற்ற நிகழ்வில் கொடூர தாக்குதலை கண்டித்தும், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்ற பாஜகவினர் அங்கு வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் நேதாஜி, பொதுக்குழு உறுப்பினர்கள் பானுச்சந்தர் வைரமுத்து, மாவட்ட துணைத் தலைவர் பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.