

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக மீண்டும் வென்றுள்ள நிலையில், அக்கட்சி தொடர்ச்சியாக 7வது முறை வெற்றி பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. அங்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்த நிலையில், இப்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
அத்துடன் சேர்ந்த இமாச்சல பிரதேச மாநிலச் சட்டசபை முடிவுகளும் வெளியாகி வருகிறது. இதில் இமாசல பிரதேசத்தில் பாஜகவால் வெல்ல முடியவில்லை என்ற போதிலும், குஜராத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
குஜராத்தில் ஆளும் மாநில அரசுக்கு எதிராக அதிருப்தி இருந்ததாகச் சொல்லப்பட்டது. இதன் காரணமாகவே விஜய் ரூபானி கடந்த ஆண்டு செப். மாதம் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பூபேந்திர படேல் முதல்வராக்கப்பட்டார். அவர் சுமார் ஓராண்டாக முதல்வராக இருந்தாலும் கூட, இன்னுமே ஆளும் மாநில பாஜக அரசு மீதான குஜராத் மக்களின் அதிருப்தி குறையவில்லை எனச் சொல்லப்பட்டது. இதனால் இந்தத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறுமா என்றெல்லாம் கூட கேட்டார்கள்.
அதிலும் குறிப்பாகத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு தான், அங்கு மோர்பி பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் நடந்த இந்தக் கோர விபத்தும் கூட குஜராத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், அதுவும் இந்தத் தேர்தலில் துளியும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாகப் பால விபத்து நடந்த மோர்பில் தொகுதியில் கூட பாஜக வேட்பாளர் அம்ருதியா காந்திலால் ஷிவ்லால் தான் முன்னிலையில் உள்ளார். அவருக்கு இரண்டாம் இடத்தில் உள்ள காங்கிரஸின் படேல் ஜெயந்திலாலுக்கும் சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசம் உள்ளது.
இந்தத் தேர்தலை பாஜக தனது கவுரவ பிரச்சினையாகவே பார்த்தது. பிரதமர் மோடி மற்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் சொந்த மாநிலமாகக் குஜராத் இருப்பதால், அங்கு நிச்சயம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இருந்தது. பிரதமர் மோடி தொடர்ச்சியாகப் பல முறை குஜராத்தில் தீவிர பிரசாரம் செய்தார். குறிப்பாக, இறுதிக் கட்டத்தில் அவர் மிகத் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்தார். அதேபோல பல மூத்த பாஜக தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் கூட குஜராத்தில் பிரசாரத்தைச் செய்தனர்.
இதற்கு இப்போது பாஜகவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அங்கு மொத்தம் 182 இடங்கள் உள்ள நிலையில், அதில் பாஜக 158 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் 77 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியால் வெறும் 16 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. ஆம் ஆத்மி 5 இடங்களைப் பிடித்தது. பிற கட்சிகள் 3 இடங்களை பிடித்தது. கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களில் வென்றுள்ள பாஜக இப்போது ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த பிரம்மாண்ட வெற்றியின் மூலம் பாஜக மிகப் பெரிய சாதனையைப் படைத்துள்ளது. குஜராத்தில் பாஜக 1998ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளது. அப்போது முதலில் கேசுபாய் படேல் முதல்வராக இருந்தார். அதன் பின்னர் தற்போதைய பிரதமர் மோடி சுமார் 12.5 ஆண்டுகள் தொடர்ச்சியாக குஜராத் முதல்வராக இருந்தார். அதன் பிறகு ஆனந்திபென் படேல், விஜய் ரூபானி, இப்போது பூபேந்திர படேல் என முதல்வர்கள் மாறிய போதிலும், இன்னுமே கூட பாஜகவின் கோட்டையாக குஜராத் இருந்து வருகிறது. இத்தனை முதல்வர்கள் மாற்றப்பட்ட பின்னரும், தொடர்ச்சியாக ஒரு கட்சி 7ஆவது முறையாக தேர்தலில் வென்று ஆட்சியை அமைப்பது இதுவே முதல்முறையாகும்.
இதன் மூலம் பாஜக அங்குக் கலக்கல் சாதனையைப் படைத்துள்ளது. அங்கு பாஜக தொடர்ச்சியாக 7ஆவது முறையாகத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 1998க்கு பிறகு அங்கு பாஜக தோல்வியைத் தழுவியதே இல்லை. இதன் மூலம் சிபிஎம் கட்சிக்கு அடுத்தபடியாக தொடர்ச்சியாக ஒரு மாநிலத்தில் 7 தேர்தல்களில் வென்ற கட்சி என்ற மாபெரும் சாதனையை பாஜக படைக்கும். சிபிஎம் மேற்கு வங்கத்தில் 7 தேர்தல்களில் வென்று, 1977 முதல் 2011 வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது பாஜகவுக்கு மிகப் பெரிய சாதனையாக இருக்கும்.
குஜராத்தில் கடந்த 2017 தேர்தலில் பாஜகவின் இடங்கள் சற்று குறைந்தன. 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டசபையில், பாஜக பெரும்பான்மையைப் பெற்ற போதிலும், 99 இடங்களில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது. அதேநேரம் காங்கிரஸ் கட்சி பல தேர்தல்களுக்குப் பிறகு முதல்முறையாக 77 இடங்களில் வென்றன. இருப்பினும், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் … Read more
- கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர்களுக்கு விபத்து..,குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி … Read more
- ஒன்றிய, கர்நாடகா அரசுகளை கண்டித்து, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்…குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்.நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள … Read more
- நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்…மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.அந்த அரசன் சகல … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 261: அருளிலர் வாழி தோழி! மின்னு வசிபுஇருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடுவெஞ் … Read more
- குறள் 538:புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். பொருள் (மு.வ): சான்றோர் புகழ்ந்து சொல்லியச் … Read more
- பிஜேபியுடன் கூட்டணி முறிவு… அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்சசியை வெளிப்படுத்திய இஸ்லாமியர்கள்..,பி.ஜே.பியுடன் கூட்டணி முறித்துக் கொண்டதற்காக சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இஸ்லாமியர்கள் இனிப்பு ஊட்டி … Read more
- வாடிப்பட்டி அருகே மத்திய சிறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியல்..!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக சிறுமலை அடிவாரத்தில் உள்ள … Read more
- கழிவுநீரை அகற்ற லஞ்சம் கேட்ட மாநகரட்சி அதிகாரி கைது..!தொடர்ந்து இதுகுறித்து பொன்னகரம் வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர் விஜயகுமார் கணேசன் … Read more
- சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985)…சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் … Read more
- குளச்சல் படகு மூழ்கி மூன்று குமரி மீனவர்கள் மாயம்..!மீனவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆள் கடல் பகுதியில் 29. 9. 2023 அன்று மீன் … Read more
- விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருள் கண்காட்சி..!விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவின் உற்பத்திப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகிறதுவிழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி … Read more
- அக்.1 முதல் விருதுநகர் – தென்காசி இடையே மின்சார ரயிலில் பயணிக்கலாம்..!
