நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முடிவெடுப்பார் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, கட்சியின் மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்குப் பின்பு பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “அனைத்து மாவட்டத்திலும் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பாஜக தலைவர் அண்ணாமலை வேட்பாளர்களை அறிவிப்பார். ஜனவரி 31ஆம் தேதிக்குப் பிறகு வேட்புமனு தாக்கல் தொடங்கும்” என்று தெரிவித்தார்.தொடர்ந்து செய்தியாளர்கள் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாகக் கேள்வி எழுப்பினர்.
அப்போது “அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க முழு அதிகாரமும் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்.
அதிமுகவுடன் கூட்டணி சுமுகமாகவோ, சுமுகம் இல்லாமல் இருப்பதாகவோ நான் சொல்லவில்லை என்று தெரிவித்த அவர், “வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி நாளை அல்லது நாளை மறுநாள் முடிவடையும் நிலையில் அதற்குள்ளாகவே மாநில தலைவர் கூட்டணி சம்பந்தமாகத் தெரிவிப்பார்.
இந்த கூட்டத்தை நாங்கள் திருச்சியில் நடத்துவதற்காகத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் 100 பேருக்கு மேல் கூட்டத்தைக் கூட்ட கூடாது என்பதற்காகத்தான் இங்கு நடத்தினோம். இதனைக் காணொளி காட்சி மூலமாக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தோம். அதனால்தான் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ இந்த கூட்டத்தில் வந்து பங்கேற்க முடியவில்லை” என்றும் தெரிவித்தார்.மேலும் பாஜக தனித்துப் போட்டியிடுவதற்கு இப்போதைக்கு அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் தேடும் அனைத்துமே கிடைப்பதில்லை,கிடைத்த அனைத்தும் தேடி கிடைத்ததுமில்லை,எதையோ தேடி எதையோ பெற்று எதையோ தொலைத்து,வெளியே […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 411செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்செல்வத்து ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் […]
- இன்று முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் நினைவு நாள்விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரர் யூரி ககாரின் (Yuri Gagarin) நினைவு நாள் […]
- மகளிர் காவல்துறை பொன்விழா நெல்லை வந்த சைக்கிள் பேரணிக்கு உற்சாக வரவேற்புதமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை […]
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு..!தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான […]
- பங்குனி உத்திர பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு..!பங்குனி உத்திர பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.ஜெயராமன் நம்பூதிரி தலைமையில் […]
- மதுரையில் முதலமைச்சரின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த புகைப்படகண்காட்சிதமிழ்நாடு முதலமைச்சர் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த பிரமாண்டமான புகைப்படக் கண்காட்சியினை, பள்ளி கல்வித்துறை […]
- நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்..!தென்தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயமான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று […]
- ஏப்ரல் மாதம் முதல் மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைமதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேர சேவை துவங்கபடுகிறது.மதுரை விமான […]
- இன்னோசன்ட் காலமானார்இந்திய சினிமாவில்ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்த பிரபல மலையாளகுணசித்திர நடிகர் இன்னோசன்ட்(75) நேற்று மாலை திருவனந்தபுரத்தில்(27.03.2023) […]
- ஜெயலலிதாவை முன் வைத்து சசிகலா நடத்திய அரசியலை சொல்லும் ‘செங்களம்’எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள புதிய இணையத் தொடர் ‘செங்களம்’.இந்த இணையத் தொடரில் […]
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]