பிக் பாஸ் தமிழ் சீசன் 5ம் பகுதி முடிந்து சில நாட்களே ஆனா நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ரசிகர்களை 24 மணி நேரமும் குதூகலிக்க செய்ய வந்துள்ளது!
ஒரு மணி நேர ஷோவுக்காக தினமும் கொஞ்ச நேரம் ஷூட்டிங் நடத்திட்டு மத்த நேரம் ரெஸ்ட் கொடுத்து விடுவார்கள், முழுக்க முழுக்க ஸ்க்ரிப்டட் ஷோ உள்ளிட்ட அத்தனை விமர்சனங்களையும் தகர்த்தெறியும் வகையில், 24 மணி நேர நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முயற்சியில் பிக் பாஸ் குழு முடிவு செய்துள்ளது! கமல்ஹாசன் தொகுத்து வழங்க டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 70 நாட்கள் இந்த ஷோ ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது! பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின், 14 போட்டியாளர்கள் விபரம் இதோ!
வனிதா விஜயகுமார்
பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு, கலக்கியவர் வனிதா விஜயகுமார்! பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளராக நுழைந்தார். இதற்கு முன் செய்த சிறிய தவறுகளை சரி செய்து விட்டு இந்த முறை வெற்றியை நோக்கி பயணிப்பேன் என சொன்னார். அவருக்கு கமல், தேன் பாட்டிலை பரிசாக கொடுத்து உள்ளே அனுப்பி வைத்தார்!
நிரூப்
ஜனவரி 16ம் தேதி வரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த நிரூப் தற்போது, எப்படியாவது டைட்டிலை தட்டித் தூக்க வேண்டும் என்கிற முயற்சியோடு இரண்டாவது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்! அவருக்கு கமல் மிளகு கொடுத்து அனுப்பினார்.
ஜூலி
பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளரான “குறும்படம்” புகழ் ஜூலி பிக் பாஸ் அல்டிமேட்டில் 3வது போட்டியாளராக கலந்து கொள்ள ரிக்ஷாவில் வந்து இறங்கினார். கமலிடம், ஜுலி வெங்காயத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.
அபிராமி
பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற அபிராமி, 4வது போட்டியாளராக கலந்து கொண்டார். அபிராமிக்கு மங்களகரமாக மஞ்சள் கொடுத்து உள்ளே அனுப்பி வைத்தார் கமல்ஹாசன். ஒவ்வொரு பொருளுக்கும் உள் அர்த்தம் வேறு இருக்கிறதாம். காயின் டாஸ்க் போல மசாலாவை வைத்து டாஸ்க் நடக்கும் எனவும் கூறப்படுகிறது!
தாமரை
பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்றவர், தாமரை! பிக் பாஸ் வீட்டில் இருக்க ரொம்பவே பிடித்திருக்கிறது என சொன்ன நிலையில், மறுபடியும் ஒரு 70 நாட்கள் இருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது! தாமரைக்கு அரிசி வழங்கப்பட்டது.
தாடி பாலாஜி
பிக் பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற தாடி பாலாஜி, 6வது போட்டியாளராக பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ளார். பிரிந்த மனைவியுடன் சென்ற முறை பிக் பாஸ் வீட்டிற்கு வந்த தாடி பாலாஜி இந்த முறை குடும்ப சுமை இன்றி வந்துள்ளதாக தெரிவித்தார். அவர் சைஸுக்கு முருங்கைக் காயை கொடுத்து உள்ளே அனுப்பினார் கமல்.
பாலாஜி முருகதாஸ்
இந்த சீசனில் தாடி பாலாஜியை தொடர்ந்து, 7வது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார், பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் சீசன் 4ல் ஆரி இருந்த நிலையில், டைட்டில் இவருக்கு கிடைக்காமல் ரன்னர் அப் ஆனார். இந்த முறை டைட்டிலை வென்றே தீருவேன் என்கிற வெறியுடன் வந்துள்ளார். பாலாஜிக்கு கீரை வழங்கப்பட்டது.
அனிதா சம்பத்
பாலாஜி முருகதாஸ் உடனே நடனமாடிய படி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார் அனிதா சம்பத். ஸ்பேஸ் இல்லை என்கிற பிரச்சனை இனி உங்களுக்கு இருக்காது. 24 மணி நேரமும் ஸ்பேஸ் இருக்கு நீங்க என்ன பண்ணப் போறீங்க என பார்க்க மக்கள் காத்திருக்கின்றனர் என்றார் கமல்! பால் உடன் வீட்டிற்குள் நுழைந்தார் அனிதா சம்பத்.
சுஜா வருணி
பிக் பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டாக வீட்டிற்குள் ஆகாய மார்கமாக நுழைந்த சுஜா வருணி இப்போ அம்மா சுஜா வருணியாக அடக்கமாக ஆட்டம் பாட்டம் இல்லாமல் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சுஜா வருணியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சுஜா வருணிக்கு பூண்டு வழங்கப்பட்டது.
சுரேஷ் தாத்தா
காரில் இருந்து இறங்கியதும் கையில் சுடச் சுட சிறுதானிய உப்மாவை எடுத்துக் கொண்டு கமல் சாருக்கு வழங்கியபடியே அறிமுகமானார் சுரேஷ் சக்கரவர்த்தி. அவருக்கும் தாமரைக்கும் தான் முட்டிக்கப் போகுது என்றும் சுரேஷ் சக்கரவர்த்தி, தாமரை மற்றும் வனிதா இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. உப்பு டப்பாவுடன் 10வது போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.
ஷாரிக்
ஷாரிக் 11வது போட்டியாளராக பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டார். அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் உள்ளேயும் ஜோடி போட்டு ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபிநய்
பிக் பாஸ் தமிழ் சிசன் 4ல் கலந்து கொண்ட நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் வாடி, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். பாவனி இல்லை என்றாலும் அபிநய்க்கு பிடிக்காத நிரூப் மற்றும் தாமரை உள்ளே இருப்பது குறிப்பிடத்தக்கது. அபிநய்க்கு நெய் கொடுத்து அனுப்பினார் கமல்.
சுருதி
மீண்டும் தாமரையுடன் மோதல் ஏற்படுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு 13வது போட்டியாளராக பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ளார் சுருதி. இளைஞர்களின் இதயங்களை கவரும் போட்டியாளராக இவர் மட்டுமே இந்த சீசனில் இருக்கிறார் என்று ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
சினேகன்
பிக் பாஸ் முதல் சீசனில் ரன்னர் அப் ஆன கவிஞர் சினேகன் பிக் பாஸ் அல்டிமேட்டில் 14வது போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இரண்டு புத்தகங்களை கமல் சாருக்கு பரிசளித்த சினேகனுக்கு வாழைக்காய் பரிசளித்தார் கமல்.
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]
- ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் தகவல்காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என […]
- மதுரை மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மதுரை துர்கா காலனியில் அடிப்படை வசதிகேட்டு மேயர் காரை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை 97 […]
- டிகிரி முடித்தவரா நீங்கள்? தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை ரெடிதேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு […]
- 12 ஆண்டுக்கு பின் இன்று மேற்கே திரும்பும் கிழக்கே போன ரயில்போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ,கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கே […]
- எலிசபெத் ராணியின் நினைவாக மிகப் பெரிய தங்க நாணயம் வெளியீடு…பிரிட்டன் எலிசபெத் மகாராணி முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எலிசபெத் ராணி […]
- நடிகர் போண்டாமணிக்கு திடீர் உடல்நலக்குறைவு…பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]