• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லம் -முதலமைச்சர் திறந்து வைத்தார்

ByA.Tamilselvan

Dec 11, 2022

காணொலி காட்சி மூலமாக வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லம் மற்றும் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தின் அறையை புனரமைத்து பராமரிக்க தமிழக அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அது மட்டுமின்றி அறையின் முன்புறம் பாரதியாருக்கு மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்படும் என்றும் கூறி இருந்தார். அதன்படி சிலை அமைக்க ரூ.18 லட்சமும், அறைக்கு மாத வாடகையாக இந்த நிதியாண்டுக்கு ரூ.67,500-ம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த பணிகள் இப்போது முடிவடைந்த நிலையில், பாரதியார் வாழ்ந்த வீட்டின் அறை புனரமைக்கப்பட்டதுடன், மார்பளவு வெண்கலச் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதே போல பாரதியார் குறித்த நூல் ஒன்றையும் முதல்வர் , அமைச்சர்கள் வெளியிட்டனர்