கடலூர் மாவட்டத்தில் உள்ள புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்களின் அறிவுரையின்படி இணையவழி குற்றபிரிவு காவல் ஆய்வாளர் கவிதா அவர்கள் கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணையவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.