வேலூர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின் பேரில் வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்து காவல்துறை சட்டம் ஒழுங்கு காவல் துறையுடன் இணைந்து தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் இருந்தால் ஏற்படும் அவலம் குறித்து விளக்கினர்!
மேலும், அண்ணா சாலையில் காவல் துறையின் சார்பில், விபத்தை தடுப்போம் தலைக்கவசத்தை அணிவோம்; உயிர் சேதம் இல்லாத பயணிப்போம் என்ற வாசகத்தின் அடிப்படையில், பொதுமக்களுக்கு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.