• Tue. Sep 26th, 2023

பயிற்சி வகுப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Byஜெ.துரை

Jul 20, 2023

சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள துவராக தாஸ் கோவர்தன் தாஸ் வைஷ்ணவா கல்லூரியில் முதுநிலை வணிகவியல் துறை சார்பில் ஷிப்ட் -2 என்ற கூடுதல் மதிப்புள்ள பாடமான “நிதி சந்தை” மற்றும் “வங்கி மற்றும் நிதி சார்ந்த வகுப்புகள் இந்த கல்லுரியில் பயிலும் இரண்டாம்,மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர் மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கபட்டது.

இந்த நிகழ்ச்சியில் மேலாண்மை ஆய்வுகள் துறை தலைவர் பேராசிரியர்
திருமதி தேன் மொழி, கல்லுரியின் செயலாளர் அசோக் குமார் முந்திரா, கல்லூரியின் முதல்வர் டாக்டர் சந்தோஷ் பாபு, வணிகவியல் துறை தலைவர் டாக்டர் ப.சத்தியநாராயணன் இன்ஃபாக்ட் புரோ இயக்குனர் பாலாஜி, ஆகியோர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் இந் நிகழ்ச்சிக்கு இந்த துறையை சார்ந்த துணை பேராசியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *