• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

உலக போலியோ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு..,

ByS. SRIDHAR

Oct 24, 2025

உலக போலியோ தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கம் இணைந்து 24.10.2025 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் புதுக்கோட்டை கலைஞர் பூங்காவில் சங்கத் தலைவர் Rtn.AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் செல்வி துரைமணி வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் திருமதி திலகவதி செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பலூன் பறக்க விடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட செயலாளர் (உடல் உறுப்பு தானம்) கண.மோகன்ராஜா, துணை ஆளுநர் B.அசோகன், கருத்தரங்க தலைவர் அழகப்பன் பொருளாளர் சங்கர், மாவட்ட இணை செயலர் துரைமணி, பாண்டியன் மாமன்ற உறுப்பினர் ஓம்ராஜ், தங்கராஜ், குஞ்சிதபாதம், அரசகுமார், பாலமுருகன் தயாளன் ஆரவாமுதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.