ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த்சோரனுக்கு ஜாமீன்
நில மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த்சோரனுக்கு அம்மாநில நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், நில மோசடி வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக கூறி கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி…
நீட் சர்ச்சையால் ஜூலை 1 வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நீட் குறித்த சர்ச்சையால் வருகிற ஜூலை 1ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், முதல் 2…
நமக்கு நல்ல தலைவர்கள் தேவை: நடிகர் விஜய்
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளைக் கௌரவிக்கும் விழாவில், இன்று விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவில், நமக்கு நிறைய நல்ல தலைவர்கள் தேவை என நடிகர் விஜய் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை…
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடிகர் விஜய்யின் கல்வி விருது விழா தொடக்கம்
10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை கொளரவிக்கும் வகையில், நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.திருவான்மியூரில் உள்ள…
நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறிய நா.த.க தலைவர் சீமான்
“மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது…
3வது நாளாக குற்றால அருவிகளில் குளிக்கத்தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, குற்றால அருவிகளில் குளிப்பதற்கு 3வது நாளாக தடை விதிக்ப்பட்டுள்ளது.மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் இன்று மூன்றாவது நாளாக வெள்ளப் பெருக்கு நீடித்தது.…
நரபலி பூஜை செய்வதாகக் கூறி இளம்பெண்ணிடம் மோசடி
கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரிடம் நரபலி பூஜை செய்வதாகக் கூறி ஒரு கும்பல் அவரிடம் இருந்து நகை மற்றும் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காடஞ்சேரி பகுதியை சேர்ந்த சகாய ஜெகன் மனைவி…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 பேர் போட்டி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம்தமிழர் கட்சிகளைச் சேர்ந்த 29 பேர் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி…
கீழடியில் தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 10ஆம் கட்ட அகழாய்வில், ‘தா’ என்ற தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற அகழாய்வு மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் இருப்பது கண்டறியப்பட்டது.…
ராகிங் கொடுமையால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
ராஜஸ்தான் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் கொடுமை செய்ததில் உடல்நிலை பாதிக்கப்பட்ட முதலாமாண்டு மாணவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம், துன்கார்பூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி ஒன்றில் பயிலும்…