சொல்லிலும் ,செயலிலும் கவனம் தோவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியினரை எச்சரித்துள்ளார். ” நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன்” என்றும் ஸ்டாலின் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அமைச்சர் பொன்முடி பேசிய விவகாரங்கள் விமர்சிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.