• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள், பெட்ரோல் பறிமுதல்..,

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ பீடி இலைகள், 400 லிட்டர் பெட்ரோலை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி கடல் பகுதியில் சுங்கத் துறை கண்காணிப்பாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நடுக்கடலில் 3 கடல் மைல் தொலைவில் ஒரு பைபர் படகு, சுங்கத் துறை ரோந்து படகை கண்டவுடன் வேகமாக சென்றனர். இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் விரட்டிச் சென்று காசுவாரி தீவு அருகே அந்தப் படகை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் சோதனையிட்டதில், அந்தப் படகில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ பீடி இலைகள், 400 லிட்டர் பெட்ரோல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பீடி இலைகள், பெட்ரோல் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட பைபர் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்கத் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜெயபால், சுனாமி காலனியைச் சேர்ந்த ஜெனிஸ்டன் ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.” கலெக்டரிடம் இருந்து கொண்டு பல்வேறு அதிமுக பிஜேபி அரசியல் வாதிகள் மிரட்டும் கலெக்டர் நேர்முக உதவியாளர் பிரபு என்பவரிடம். தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் மற்றும் சுங்க அமலாக்கத்துறை போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகவும் உளவுத்துறை போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி எஸ்ஐ பாண்டியன் என்பவர் இரவில் குடிபோதையில் புலம்பி உள்ளதாகவும் நிலையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி எஸ்ஐ பாண்டியன் என்பவர் இரவில் குடிபோதையில் புலம்பி உள்ளதாகவும் பத்திரிகை யாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் தகவல்கள் வெளியாகியுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது