கள்ளழகர் இறங்கும் பகுதியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, அதிகாரிகள் வைகை ஆற்றுக்குள் ஆய்வு செய்தனர்.
மதுரை,மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மதுரை சித்திரைத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, வைகை ஆற்றில் அருள்மிகு கள்ளழகர் இறங்கும் இடம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பான நேரடி ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன் ,
மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.