• Thu. Apr 25th, 2024

அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

Byமதி

Nov 18, 2021

அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களிடம் அரசாணைக்கு புறம்பாக முன்பணம் பெறுவது, பெற்ற முன் பணத்திற்கு ரசீது கொடுக்க மறுப்பது, Final Approval கேட்டு காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்ப மறுப்பது போன்ற அரசு விதிகளுக்கு புறம்பான நடவடிக்கைகளை செய்து வரும் விருதுநகர் திருவேங்கடம் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், முறைகேடுகளுக்கு துனை போவதுடன் பொறுப்பை தட்டி கழிக்கும் MD இந்தியா நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் காப்பீட்டுத் திட்ட குறைகளை களைய நியமனம் செய்யப்பட்ட யூனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ் அவர்கள் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்க மறுத்து வருவாதால் அவரை எதிர்த்தும், கணேஷ் அவர்களின் தவறான அணுகுமுறையால் காப்பீட்டு திட்ட குறைபாடுகள் நீடித்து வருகிறது.

அரசு உத்திரவுக்கு மாறாக செயல்படும் கணேஷ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் வருகிற 26ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு, விருதுநகரில் மதுரை சாலையில் அமைந்துள்ள யூனைடெட் இந்தியா நிறுவன அலுவலகம் முன் நடைபெறும் என மாவட்ட தலைவர் K லியாகத் அலி, மாவட்ட செயலாளர் R.வைரவன் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *