

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில்,ஆர்வமுள்ள பட்டியல் இனத்தவர், மற்றும் பட்டியல் பழங்குடியினர் பிரிவு இளையோர் , மாணாக்கர் , தொழில் முனைவோர் , தொழில் அலகு உரிமையாளர் , மக்கள் பணியாற்றுவோர் , என ஏராளமானோர் கலந்து கொண்ட கருத்தரங்கில் திட்டம் குறித்த விரிவான விளக்கவுரைகள் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சி.கணேசன்,
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில்முனைவோர்க்கு மட்டுமேயான சிறப்புத் திட்டம் எனக் குறிப்பிட்டார் . மேலும், இத்திட்டத்தில் வேளாண்மை தவிர்த்து பிற அனைத்து உற்பத்தி , வணிகம் மற்றும் சேவைத் தொழில்களுக்கு மானியம் உண்டு என்றும், மானியம் மொத்த திட்டத் தொகையில் 35 % ஆகும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சொந்த நிதியில் அல்லாமல் வங்கிக் கடன் பெற விரும்பினால் மீதமுள்ள 65 % வங்கிக் கடனாகப் பெற ஏற்பாடு செய்யப்படும் என்றும், பெறுகின்ற வங்கிக் கடனுக்கு திருப்பிச் செலுத்தும் காலம் முழுமைக்கும் 6 % வட்டி மானியமும் உண்டு என்று கூறிய அவர்,
புதிதாக தொழில் தொடங்குவோர் மட்டுமல்லாது ஏற்கெனவே இயங்கிக் கொண்டுள்ள தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்தவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும் கூட மானிய உதவி பெறலாம் என்றார்.மேலும், கூட்டதில், தொழில் தொடங்குவது மற்றும் அதனை வெற்றிகரமாக மேலாண்மை செய்வது குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்துரை வழங்கினர் .மேலும் பங்கேற்றவர்கள் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் D. அனில், மாவட்டத் தாட்கோ மேலாளர் திருமதி ராஜேஸ்வரி, சிறு குறு தொழில்கள் மைய உதவி இயக்குனர் பி. ஜெயசெல்வம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பல்வேறு தொழில் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர்களுக்கு விபத்து..,குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி … Read more
- ஒன்றிய, கர்நாடகா அரசுகளை கண்டித்து, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்…குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்.நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள … Read more
- நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்…மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.அந்த அரசன் சகல … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 261: அருளிலர் வாழி தோழி! மின்னு வசிபுஇருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடுவெஞ் … Read more
- குறள் 538:புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். பொருள் (மு.வ): சான்றோர் புகழ்ந்து சொல்லியச் … Read more
- பிஜேபியுடன் கூட்டணி முறிவு… அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்சசியை வெளிப்படுத்திய இஸ்லாமியர்கள்..,பி.ஜே.பியுடன் கூட்டணி முறித்துக் கொண்டதற்காக சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இஸ்லாமியர்கள் இனிப்பு ஊட்டி … Read more
- வாடிப்பட்டி அருகே மத்திய சிறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியல்..!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக சிறுமலை அடிவாரத்தில் உள்ள … Read more
- கழிவுநீரை அகற்ற லஞ்சம் கேட்ட மாநகரட்சி அதிகாரி கைது..!தொடர்ந்து இதுகுறித்து பொன்னகரம் வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர் விஜயகுமார் கணேசன் … Read more
- சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985)…சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் … Read more
- குளச்சல் படகு மூழ்கி மூன்று குமரி மீனவர்கள் மாயம்..!மீனவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆள் கடல் பகுதியில் 29. 9. 2023 அன்று மீன் … Read more
- விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருள் கண்காட்சி..!விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவின் உற்பத்திப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகிறதுவிழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி … Read more
- அக்.1 முதல் விருதுநகர் – தென்காசி இடையே மின்சார ரயிலில் பயணிக்கலாம்..!
- தொடர் விடுமுறையால் திருப்பதியில் அலைமோதிய கூட்டம்..!தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது.இதனால் வைகுந்தம் … Read more
