திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் பகுதியில், பழமையான நடுகல் புடைப்பு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்றதுமான ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. வைணவ ஸ்தலங்களில் குடவறை கோவில் என்ற சிறப்பும் இந்தக் கோவிலுக்கு உண்டு. மிகப் பழமையான இந்தக் கோவிலில் பல கல் வெட்டுகள் ஏற்கனவே கண்டெடுக்கப் பட்டுள்ளன.

மேலும் கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் மண்ணில் புதையுண்ட நிலையில் அரிய வகை புடைப்பு சிற்பம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் உத்தரவின் பேரில், கோவிலின் அருகில் மண் மூடிக்கிடந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டு மறைந்து கிடந்த நடுகல் புடைப்பு சிற்பம் மீட்டெடுக்கப்பட்டது. இது குறித்து கோவிலின் கல்வெட்டுகள் குறித்த ஆவணங்களில், குதிரை வீரன் மற்றும் போர் வீரன் நடுகல் புடைப்பு சிற்பமான இது கிபி 17 – 18ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் என்று தெரிய வந்தது. இது குறித்து 1922ம் ஆண்டு தொல்லியல் ஆவணங்களில், கிபி 17 – 18ம் நூற்றாண்டு இந்திய கல்வெட்டு அறிக்கை என்றும் அதில், திருத்தங்கல் மலைக்கோவில் வடக்குப் பகுதியில் உள்ள தனிப் பாறையில் உள்ளது. இது ஒரு நடுகல் சிற்பத் தொகுதியை ஒட்டிய கல்வெட்டாகும். ‘கலங்காத கண்ட நாயக்கருக்காக’ இத்திருத்தங்கல் சீமை ரத்தக்காணிக்கையாக கொடுக்கப்பட்டதை தெரிவிக்கிறது என்று ஆவணக் குறிப்பின் மூலம் அறிய முடிகிறது. மிகப் பழமையான, புராதான நடுகல் புடைப்பு சிற்பம் திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவிலில் மீட்டெடுக்கப்பட்டிருப்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது..

- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]