உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தின் போது மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் தர உள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் போட்டியிடுகிறது. மொத்தம் 100 தொகுதிகளில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி போட்டியிடுகிறது.
மஜ்லிஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓவைசி தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் உ.பி.யின் மீரட் நகரில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு டெல்லி நோக்கி ஓவைசி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாஜர்சி சுவங்க சாவடி அருகே 4 பேர் கொண்ட மர்ம கும்பல், ஓவைசி கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஓவைசி உயிர் தப்பினார்.
ஓவைசி மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். உ.பி. தேர்தல் களத்திலும் ஓவைசி மீதான தாக்குதல் விவாதப் பொருளாக முக்கிய இடம் பிடித்தது. இத்தாக்குதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஓவைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் இதனை ஓவைசி நிராகரித்தார். இது தொடர்பாக லோக்சபாவில் பேசிய ஓவைசி, நான் மரணத்தை நினைத்து அச்சப்படவில்லை. எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவை இல்லை. இசட் பிரிவு பாதுகாப்பை நான் நிராகரிக்கிறேன். என் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்காக நான் அமைதியாக இருக்கப் போவது இல்லை. வெறுப்பு மற்றும் அரசியல் தீவிரவாதத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
இந்நிலையில் ஓவைசி மீதான தாக்குதல் தொடர்பாக இன்று காலை 11.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் தர இருக்கிறார். இந்த விளக்கத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 1 மணிநேரம் ஒத்திவைக்கப்பட உள்ளது. லதா மங்கேஷ்கர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]
- குறள் 449முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்சார்பிலார்க் கில்லை நிலை.பொருள் (மு.வ):முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் […]
- ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட ரஜினிகாந்த்இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் […]
- மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் – அமைச்சர் தகவல்சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுரத்து செய்யப்படுவதாக […]
- வீடியோ கேமுக்கு அடிமையான மாணவன் தற்கொலையை நேரடி ஒளிபரப்பு செய்த கும்பல்கேரளாவில் வீடியோ கேமுக்கு அடிமை; இன்டர்நெட்டில் நேரலையாக ஒளிபரப்பி மாணவனை தற்கொலை செய்ய வைத்த கும்பல்கேரள […]