விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொடுக்கின்ற கட்சி அதிமுக. அதை கெடுக்கின்ற கட்சி திமுக என பேசினார்
திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு . 4 ஆயிரமும், தொழிற்சாலையருக்கு . 40 ஆயிரமும் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. 23 மாத கால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைக்கக்கூடிய அத்தனை திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு எல்லாம் அம்மா பரிசு பெட்டகம் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் மக்களுக்கு பென்சிலோ அல்லது பேனாவோ கூட வழங்கப்படவில்லை. எழுதாத பேனாவுக்கு கடலில் 80 கோடிக்கு சிலை வைப்பதற்கு பதிலாக இரண்டு கோடியில் கருணாநிதி நினைவிடத்தில் பேனா சிலை அமைத்துவிட்டு மீதமுள்ள 78 கோடிக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதும் பேனா வாங்கி அளித்தால் இந்த ஆட்சியை மக்கள் அனைவரும் வாழ்த்துவார்கள்.50 ஆண்டு கால கனவான அரசு மருத்துவக் கல்லூரி விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைக்காத நிலை இருந்த சூழலில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் 7.5% உள் ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இதனால் 9 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் படித்த நிலை மாறி தற்போது 500 பேர் படிக்கின்றனர். அவர்களுக்கும் அரசு சார்பில் கல்வி கட்டணம் செலுத்தப்பட்டது.திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியையும் ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றவில்லை. மாறாக அதிமுக கொடுத்துக் கொண்டிருந்த அனைத்தும் நிறுத்திவிட்டனர்.
ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயன் அளித்த அம்மா மினி கிளினிக் மூடப்பட்டது. தற்போது அம்மா உணவகத்திற்கும் வேட்டுவைத்து வருகின்றனர்.விளம்பரத்தால் மட்டுமே ஒரு ஆட்சி நடைபெறுகிறது என்றால் அது திமுக ஆட்சியில் மட்டுமே. ஊடகங்கள் தான் திமுக ஆட்சியை நடத்துகின்றன. கொடுக்கின்ற கட்சி அதிமுக. அதை கெடுக்கின்ற கட்சி திமுக. கொடுக்கின்ற ஆட்சி அதிமுக. எடுக்கின்ற ஆட்சி திமுக.புதியதாக அரசியலுக்கு வந்தபோது விஜயகாந்த், ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தனர். கலைஞர் கருணாநிதி ஆட்சியை கொண்டு வருவோம் என யாரும் கூறவில்லை.ஏனென்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி என்பது நல்ல ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி இல்லாத மக்களுக்கான ஆட்சி உழைப்பாளிகளுக்கான ஆட்சி என்பதை உணர்ந்த அவர்கள் கூறினார்கள்.இல்லத்தரசிகளை வாழ வைத்த தலைவி புரட்சித்தலைவி அம்மா . மடிக்கணினி மூலம் மாணாக்கர்களின் உயர் கல்வியை ஊக்கப்படுத்தியது புரட்சித்தலைவி அம்மா .திமுக ஆட்சியில் உதயநிதி ஸ்டாலினை மந்திரியாக ஆகியது தவிர்த்து வேறு எதுவும் செய்யவில்லை.
அதிமுக ஆட்சியில் தான் ராஜபாளையம் பகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தோம். 11 மருத்துவக் கல்லூரிகள் அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது.இரண்டு மாதங்கள் தேர்தல் தள்ளி போயிருந்தால் ராஜபாளையத்தில் அரசு கல்லூரி கொண்டு வந்திருப்போம்.இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். இக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]