• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ்ஸை தவிர்த்துவிட்டு அதிமுக வலிமை பெற முடியாது – தனியரசு

ByA.Tamilselvan

Jan 25, 2023

ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு வரும் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. அதிமுகவை பொறுத்தவரை ஓ.பி.எஸ, ஈ.பி.எஸ் என இரு அணிகளும் இடைத்தேர்தல் களம் காண்கிறது. அதிமுகவின் இருதரப்பினரும் பல்வேறு கட்சிகளை சந்தித்து இடைத்தேர்தலில் ஆதரவு கோரி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் தனியரசு நிருவர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு. ஓபிஎஸ்-ஐ தவிர்த்து விட்டு எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவிற்கு வலிமை பெற செய்ய முடியாது என்றும் கூறினார்.