

எடப்பாடியாரை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுகவை முடக்கி கேள்விக்குறியாக்க வேண்டும் என கனவு கண்ட எதிரிகள்,துரோகிகளின் தலையில் இடி விழுந்து விட்டது. அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு பேசி இருப்பது தான் ஹைலைட்
அகில இந்திய தேர்தல் ஆணையம் கழகப் பொதுச் செயலாளராக எடப்பாடியாரையும், தலைமை கழக நிர்வாகிகளையும் அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது.
இதனை தொடர்ந்து கழக அம்மா பேரவையின் சார்பில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமங்கலம் தொகுதியில் உள்ள நடுவக்கோட்டை, ஆலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழக அம்மா பேரவை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பேசியதாவது,
புரட்சித்தலைவி அம்மாவுக்கு பிறகு தாய் இல்லாத பிள்ளைகளாய் நாம் தவித்த போது இந்த இயக்கத்தையும், இயக்கத் தொண்டர்களை காப்பாற்ற கலங்கரை விளக்கமாய் எடப்பாடியார் நமக்கு கிடைத்தார்.
இந்த இயக்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையில் உலக அளவில் ஏழாவது இடத்திற்கும், இந்திய அளவில் மூன்றாவது இடத்திற்கும், தமிழகத்தில் முதலிடத்திற்கு கொண்டு சென்றார். உலகத்திலே ஏழைகளுக்கான ஒரே மக்கள் இயக்கம் தான் அதிமுக உள்ளது.
இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு ஆய்வு பின் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்கு பின் கழகப் பொதுச் செயலாளராக எடப்பாடியாரையும் அங்கீகரித்துள்ளது .இது 2 கோடி கழக தொண்டர்களையும், தமிழக மக்களின் எண்ணங்களையும் நிறைவேற்றி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இதனை தொடர்ந்து தலைமை கழக நிர்வாகிகளையும், மாவட்ட செயலாளர்களையும் அங்கீகரித்துள்ளது. எடப்பாடியார் இந்த இயக்கத்திற்காக பல போராட்டங்களை செய்து, துரோகத்தை வென்றெடுத்து, இந்த இயக்கத்திற்காக அவதூறுகளையும், பழிச்சொல்லைகளையும் தனதாக்கி கொண்டு இயக்கத்திற்கு வெற்றியை தந்துள்ளார்.
இந்த இயக்கம் தான் ஜனநாயகத்தின் முகவரியாக உள்ளது.தமிழக மக்களின் உரிமை, தமிழக மக்களின் வளர்ச்சி, தமிழக மக்கள் எல்லாம் வளமும் பெற வேண்டும் ,இங்கு இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் ,அமைதி,வளம்,வளர்ச்சி என்று,இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் சேவையாற்ற வேண்டும் என்ற அம்மாவின் தெய்வவாக்கை கொண்டு மக்கள் பணியாற்றி வருகிறார் எடப்பாடியார்.
இயக்கத்திற்காக எடப்பாடியார் ஊன், உறக்கம் இல்லாமல் உழைத்து வருகிறார் ,ஆனால் தொடர்ந்து சிலர் அவதூறு பழிச்சொல் கூறி வருகிறார்கள். இந்த இயக்கத்தை எப்படியாவது முடக்கிட வேண்டும் என்று எதிரிகளும்,துரோகிகளும் இயக்கத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க வேண்டும் என நினைத்தனர் அவர்கள் கண்ட கனவில் இடி விழுந்து விட்டது.
ஒரு கிளைக் கழகச் செயலாளர் நாட்டின் முதலமைச்சராக ஆகலாம், ஒரு கிளைக் கழகச் செயலாளர் ஒரு இயக்கத்தின் கழகப் பொதுச் செயலாளராக வரலாம் என்று தன் உழைப்பால் இன்று எடப்பாடியார் நிரூபித்துள்ளார்.
திமுக ஆட்சியில் காய்கறி விலை உயர்ந்து விட்டது அதனை தொடர்ந்து மளிகை பொருள் விளையும் உயர்ந்துவிட்டது .இதனால் மக்களுக்கு கூடுதல் சுவை ஏற்பட்டுள்ளது ஆனால் அரசு மக்களைப் பற்றி கவலைப்படாமல் டாஸ்மார்கில் எந்த சரக்கில் பற்றாக்குறையாக உள்ளது எந்த சரக்கு விற்பனையாகவில்லை என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாட்டில் 90 சகவீதம் பெண்களுக்கு பட்டை நாமம் கிடைக்கும். எதற்கெடுத்தாலும் கலைஞர் பெயரை முதலமைச்சர் சூட்டுகிறார் .பெண்கள் உரிமை தொகையை திட்டத்திற்கு திராவிட இயக்கத்திற்காக பாடுபட்ட தந்தை பெரியார், பேறிஞர் அண்ணா பெயரை சூட்டலாம் ஆனால் அவர்களுக்கு மனம் இருக்காது.
நாங்கள் முதியோர் உதவித் தொகையை ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கும்போது யார் பெயரை வைக்கவில்லை, மக்கள் வரிப்பணத்தின் மூலம் வழங்கும் ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கு கருணாநிதி பெயர், அந்த திட்டத்தை கருணாநிதி பேரன் உதயநிதி வழங்குகிறார், இதை முதலமைச்சர் ஸ்டாலின் கண்காணிக்கிறார். நிச்சயம் இந்த வாரிசு அரசியல் வீட்டுக்குப் போகும், எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் .இனி அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என கூறினார்.

