அதிமுக 52-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
அதிமுக 52 வது தொடக்க விழா நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கட்சிக்கொடி ஏற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து சிவகாசி காமராஜர் சிலை அருகில் மாநகர பகுதி கழக செயலாளர் கருப்பசாமிபாண்டியன் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், மாவட்ட கழக துணைச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் முத்துபாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரமணா, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட சிறுபாண்மை நலப்பிரிவு செயலாளர் சையது சுல்தான், மாவட்ட பொருளாளர் தேன்ராஜன், சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணக்குமார், கருப்பசாமிபாண்டியன், சாம் (எ) ராஜா அபினேஷ்வரன், சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வெங்கடேஷ், லட்சுமிநாராயணன், ஆரோக்கியம், மாநகர கவுன்சிலர் கரைமுருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என். செல்வம், துணைத் தலைவர் மாயாண்டி, மாணவரணி அஜய்கிருஷ்ணா, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் காமாட்சி, விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை நிர்வாகி செல்வகுமரன், சிவகாசி மாநகர எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர். கார்த்திக், சிவகாசி வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளையஞரணி செயலாளர் சங்கர், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் பொருளாளர்.கோட்டை பாண்டி, சிவகாசி கிழக்கு ஒன்றிய கழக துணைச்செயலாளர் மணிகண்டன் மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.